மெல்லிய காதல் பூக்கும் P16

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
உறவால் உயிரானவள் எழுதலாம் னு பார்த்தா மூடே இல்ல. மெல்லிய காதல் பூக்கும் எழுதின வரைக்கும் டீஸரா போடுறேன்.
images (5).jpg


மலர்விழி வந்ததிலிருந்து அவளை முறைத்துக் கொண்டிருந்த அமுதனோ அவள் ரிஷியை கட்டிப் பிடிக்கவும் கோபம் தலைக்கேற அவ்விடத்தை விட்டு வெளியே செல்லவும் முடியாமல் நிற்க தந்தையின் நெஞ்சின் மீது சாய்ந்து கதறுபவளை ஆறுதல் படுத்த உள்மனம் கட்டளையிட்டாலும் அவள் மீதான கோபமோ! "எல்லாம் நடிப்பு" என்று சொல்ல வைக்க ஒரு ஓரமாக இருந்து வேடிக்கை பார்க்கலானான்.



யாரென்றே தெரியாவிட்டாலும் "மாமா" என்று சொல்லி அழும் பெண்ணை எவ்வாறு தடுப்பது? புரியாது சரவணகுமரன் இருக்க சிவரஞ்சனியோ மலர்விழியை தேற்றலானாள்.

images (7).jpg

சிவரஞ்சினியை கண்டு அமுதன் சொன்ன அம்மா என்று புரிந்துக் கொண்டவள் இருவரின் காலிலும் விழ, அவளை ஆசிர்வாதம் பண்ணியவாறே ரிஷியிடம் யார் என்று கண்களாளேயே வினவினார் சரவணகுமரன்.



ரத்னவேலின் மகள் என்றால் இந்த சூழ்நிலை இவ்வாறே இருக்குமோ! என்ற யோசனையிலையே! அவருக்கு என்ன பதில் சொல்வதென்று ரிஷி இருக்க, அவனுக்கு அந்த கஷ்டத்தை கொடுக்காது மலர்விழியே!



"நான் அமுதவல்லி பொண்ணு மாமா. உங்க காலேஜ் மேட்" என்று சொல்ல



"நீ அமுதவல்லி பொண்ணா... அப்படியே அம்மா மாதிரி இருக்க" சொன்னது சிவரஞ்சனி.



அன்னையை போல் என்றதும் மலர்விழியின் முகம் பூரிப்பில் மிளிர, சிவரஞ்சனிக்கு அன்னையை தெரியுமா என்று ஏறிட்டாள் மலர்.

29e32058419f8462267f19f5b4fedd35.jpg

"என்னம்மா அப்படி பாக்குற நானும் அந்த காலேஜ் தான். இவங்களுக்கு ஜூனியர்" என்பதோடு நிறுத்திக் கொள்ள அமுதவல்லி கல்யாணம் பண்ணது ரத்னவேலை தானே என்று சந்தேகமாக சரவணகுமரன் யோசனையில் விழ



"அப்பா என்னயெல்லாம் அறிமுகப் படுத்த மாட்டீங்களா?" என்றவாறு அவரின் தோளை பிடித்து இழுத்து சிந்தனையை தடுத்தாள் அகல்யா.



தியாவும், பார்வதி பாட்டியும் ஒரு புறம் இருக்க, மறு புறம் அமுதன் இருந்து இங்கே நடப்பவைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அறிமுகப் படலத்தை முடித்துக் கொண்டு திரும்பிய அகல்யாவின் கண்களில் பாட்டியும், பேத்தியும் விழவே அவர்கள் பேசியாவையும் நியாபகத்தில் வந்து ப்ரதீபனின் காதில் அதை போட்டு விட ஓரக்கண்ணால் மனைவியை பார்த்தவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

6.jpg

ஸ்ரீராம் கயல்விழியின் புடவை முந்தியை இழுத்தவாறே "தூக்கு" எனும் விதமாக கையை நீட்ட குழந்தையை தூக்கியவள் வேண்டுமென்றே ரிஷியிடம் திணிக்காத குறையாக கொடுத்து



"உங்க பையன கொஞ்சம் பார்த்துக்கோங்க சாப்பாடு ரெடியானு பார்த்து விட்டு வரேன்" என்றவள் நகராமல் அங்கேயே இருக்க



மனைவியின் பொறாமை கலந்த கோபத்தை கண்டு கொண்டவன் உள்ளுக்குள் சிரித்தவாறே மனைவியின் தோள் மேல் கைபோட்டு தன்பக்கம் இழுத்தவன்



"மலர் மீட் மை டார்லிங் வைப் கயல்விழி" என்று மலருக்கு அறிமுகப் படுத்த



கயல்விழியை மேலிருந்து கீழாக பார்த்தவள் "டேய் உனக்கு போய் இப்படி தேவதை மாதிரி பொண்டாட்டியா? என்ன இருந்தாலும் என் லெவலுக்கு இல்ல" என்று கண்சிமிட்டி சிரிக்க மலர் தன்னை புகழ்ந்தாளா? இகழ்ந்தாளா? என்ற குழப்பத்திலையே அவளை பார்த்திருந்தாள் கயல்விழி.

Screenshot_20190714-163104_Instagram (1).jpg

"சரி, சரி கேக் வெட்டலாம்" அகல்யா கூச்சலிட அனைவரும் மேடையேற ரிஷி ஸ்ரீராமின் கையில் சிறு கத்தியை கொடுத்து கையை இறுக பிடித்துக் கொள்ள பிறந்தநாள் வாழ்த்துப் பாடலோடு கேக் வெட்டப்பட்டது.



தனது பிஞ்சு விரல்களால் கேக்கை பிடித்து அன்னைக்கும், தந்தைக்கும் ஊட்டிய ஸ்ரீராம் அனைவருக்கும் ஊட்ட, அகல்யா அதை அழகாக புகைப்படமாக்கிக் கொண்டிருந்தாள்.



"டேய் அமுதா என்னடா? அங்கேயே நிக்குற? இங்க வா" ரிஷி அழைக்க



அவனை முறைத்தவாறே "அதான் புதுசா உறவுன்னு சொல்லிக் கிட்டு வந்திருக்காளே! அவளையே கொஞ்சு" கடுப்பாக சொல்ல



"டேய்.. நீ என் தம்பிடா... அவ என் மாமா பொண்ணு" என்றவாறே அமுதனின் கையை பிடித்து மேடைக்கு இழுக்க இவர்களின் விளையாட்டை கண்டு சிரித்தவாறே இருந்த சரவணகுமரன் மாமா பொண்ணு என்றதில் மலர்விழி ரத்னவேலின் மகள் என்று அடையாளம் கண்டு கொண்டார்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top