தவிக்கிறேன் நான்

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
"நான் கண்ட கனவு
அது காற்றில் கறைந்த
கற்பூரம் ஆனது"

"கன்னி நான்
கண்ணீர் வடித்து நிற்க
காரணங்கள் ஆயிரம்
தொடர் கதையாய் நீள்கிறது"

"கல்வி கற்க சென்றேன்
காலம் செய்த சதியால்
பாதியில் தான் வந்தேன்"

"பேச்சினாலே பல பரிசு வென்ற நான்
பேசும் சூழலே இனி இல்லை எனும் நிலையின் போது
பேதை என் நெஞ்சினிலே பாறாங்கல்லின் சுமை"

"அன்பாய் வளர்த்த அப்பா இன்று இல்லை
அரவணைத்து செல்ல
ஆளற்ற அநாதையாய் நான் நிற்கிறேன்"

"மனமே இனி ஆசை கொள்ளாதே
இனி எந்த இழப்பையும்
உன் இதயம் தாங்காது எனும் நிலை வந்தது
நிச்சயமாய் எதையும் நினைத்து
ஆசை கொள்ளமாட்டேன் என்றேன்
கரையில் இருக்கும் மண்ணை
கடல் அலை அடித்து செல்வது போல
கடிவாளமிட்ட மனதை கலைத்திட
காலனாய் காதலும் வந்து சேர்ந்தது"


"நான் காதல் கொண்டேனா என தெரியவில்லை
அவன் கண்ணில் விழுந்தேனா என புரியவில்லை
அவன் கல்யாண செய்தி கேட்ட நொடி
காலனின் கையில் சிக்கிவிட மாட்டோமா என
சிந்தித்தது என் நெஞ்சம்"

"கடைசி ஆசையாய் ஒன்று கொண்டேன்
கவிதையாய் என் கஷ்டத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று"

"கோழையாய் தற்கொலை செய்ய மாட்டேன்
ஆனால் என் ஆசைகளை கொன்று விடுவேன்"

"சோகத்தில் தவிக்கும் என் நெஞ்சில்
சூறாவளி தான் வந்து
சோகம் எல்லாம் மாயம் ஆகுமா?
சொர்க்கம் தான் என் சொந்தம் ஆகுமா?
தவிக்கிறேன் நான்
உங்கள் பதிலிற்காக"
 
Last edited:

laksh14

Well-Known Member
"நான் கண்ட கனவு
அது காற்றில் கறைந்த
கற்பூரம் ஆனது"

"கன்னி நான்
கண்ணீர் வடித்து நிற்க
காரணங்கள் ஆயிரம்
தொடர் கதையாய் நீள்கிறது"

"கல்வி கற்க சென்றேன்
காலம் செய்த சதியால்
பாதியில் தான் வந்தேன்"

"பேச்சினாலே பல பரிசு வென்ற நான்
பேசும் சூழலே இனி இல்லை எனும் நிலையின் போது
பேதை என் நெஞ்சினிலே பாறாங்கல்லின் சுமை"

"அன்பாய் வளர்த்த அப்பா இன்று இல்லை
அரவணைத்து செல்ல
ஆளற்ற அநாதையாய் நான் நிற்கிறேன்"

"மனமே இனி ஆசை கொள்ளாதே
இனி எந்த இழப்பையும்
உன் இதயம் தாங்காது எனும் நிலை வந்தது
நிச்சயமாய் எதையும் நினைத்து
ஆசை கொள்ளமாட்டேன் என்றேன்
கரையில் இருக்கும் மண்ணை
கடல் அலை அடித்து செல்வது போல
கடிவாளமிட்ட மனதை கலைத்திட
காலனாய் காதலும் வந்து சேர்ந்தது"


"நான் காதல் கொண்டேனா என தெரியவில்லை
அவன் கண்ணில் விழுந்தேனா என புரியவில்லை
அவன் கல்யாண செய்தி கேட்ட நொடி
காலனின் கையில் சிக்கிவிட மாட்டோமா என
சிந்தித்தது என் நெஞ்சம்"

"கடைசி ஆசையாய் ஒன்று கொண்டேன்
கவிதையாய் என் கஷ்டத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று"

"கோழையாய் தற்கொலை செய்ய மாட்டேன்
ஆனால் என் ஆசைகளை கொன்று விடுவேன்"

"சோகத்தில் தவிக்கும் என் நெஞ்சில்
சூறாவளி தான் வந்து
சோகம் எல்லாம் மாயம் ஆகுமா?
சொர்க்கம் தான் என் சொந்தம் ஆகுமா?
தவிக்கிறேன் நான்
உங்கள் பதிலிற்காக"
nyccc
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top