Tks ரம்யா........
யாரும் ஒத்துக்காவிட்டாலும் அந்த கோபத்திலும் அம்மாவின் அழுகையை பார்த்து ஓடி வந்த பொண்ணு சொல்லிடுச்சே அவ அம்மா தான்னு........
சூப்பர் ரம்யா.......
பொண்ணை ஒழுங்கா வளர்க்க தெரியல.......... வந்து கேள்வி கேக்குறாங்க....... இப்போ அழுகை வேற........
பெற்றோர் முதலில் தன்னோட பிள்ளைகளின் தப்பை உணரணும்........
பாவனாக்கு அம்மானு ஒருத்தி இருக்கிறப்போ பார்த்துக்கொள்வாள் என்று விட்டுட்டு போகணும்........ அதைவிட்டுட்டு அம்மா அடிச்சா..... ஆட்டுக்குட்டி அடிச்சானு....... ரொம்பதான் பாசம்.......
நான் திலோ கட்சி தான்பா........
எனக்கு 2 பையனுங்க தான்......... இருந்தாலும் எங்கே போற வர........ எப்போ போற வர்ற....... யாரெல்லாம் போறீங்க...... எல்லாமே கேட்பேன் தான்......
பையன்களும் கடுப்பானாலும் பதில் சொல்வாங்க...... அப்புறம் எப்பவாவது சொல்லிப்பானுங்க என்னோட friends சொல்றதை பார்த்தால் நீங்க correctடா இருந்துக்கிறீங்க........
பிள்ளைகள் புரிந்துகொண்டால் போதும்......... யாருக்கும் ஏன் இப்படி பண்றோம்னு விளக்கம் கொடுக்க தேவையில்லை.......
நம்ம பிள்ளைகளுக்கு நாம் தான் காவல்.........
பார்க்கிற கேட்கிறதெல்லாம் யாருக்கும் என் பிள்ளைகளாலேயும் வந்துடக்கூடாது...... என் பிள்ளைகளுக்கும் வந்துடக்கூடாது என்கிற எண்ணத்தோடு நம் பிள்ளைகளை நான் வளர்ப்போம்....... நல்லதையே கற்றுக்கொடுப்போம்........
அரவிந்தனுக்கு திலோ பார்க்க பயமா???
நான் நம்பமாட்டேன்....... சும்மா பீலா விடுறான்.......