படம் பார்த்து கவிதை சொல்....

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் ஹாய் பிரண்ட்ஸ்...

தமிழ் புத்தாண்டு அதுவுமா புதுசா எதுவும் செய்யலைன்னா எப்படி??!!! ஒரு சின்ன முயற்சி.. நம்மளோடு கவிதை (தமிழ்..) திறமையை கொஞ்சம் தட்டி எழுப்புவோம்... ஒரு படம்... அதுக்கு உங்களோட கவிதை.. எத்தனை வரிகள் வேணாலும் இருக்கலாம்.... ஆனா அந்த படத்திற்கு பொருத்தமா இருக்கணும்...:giggle::giggle::giggle:

ரெடியா??!!!!

இதோ... இந்த படம் உங்களோட கவிதைகளுக்கு காத்துக்கிடக்கு...36259281_1958319890868861_815927422691049472_n.jpg
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
குழந்தையே ஒரு கவிதை தான் தனியா வேற கவிதை சொல்லணுமா என்ன? யாராச்சும் சொல்லுங்க மக்களே நீலவண்ண கண்ணன் கவிதையை படிக்க நானும் ரெடி... சக்தி நீயே தொடங்கி வையேன்மா...
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
குழந்தையே ஒரு கவிதை தான் தனியா வேற கவிதை சொல்லணுமா என்ன? யாராச்சும் சொல்லுங்க மக்களே நீலவண்ண கண்ணன் கவிதையை படிக்க நானும் ரெடி... சக்தி நீயே தொடங்கி வையேன்மா...

neegale ippadi sonna epapdi kkaaaa.... mmmm sari pillayaar suli poduvom...

அமுதுண்ட கண்ணனுக்கு நீராட்டலோ..
அன்னையின் கைப்பிடியில் அத்தனை சுகமோ??
கண்ணா.. நீல வண்ணா..
உன் புன்னகை ஒன்றே லட்சம் கவிதைகள் சொல்லுமே...
 

anupk

Well-Known Member
சிரிக்கிறாயா அழுகிறாயா

நீல வண்ண கண்ணா...

ஆனால்...

உன்னை பார்க்கும்

போதெல்லாம்

நான் சிரிக்கிறேன்...

உன்னை எண்ணும்

போதெல்லாம்

கோடி பூக்கள் என்னுள்...
 

Suvitha

Well-Known Member
பரமாத்மாவே ஆனாலும்...
அன்னையின் பாதத்தில் அமர்ந்து
நீராடும் மகிழ்ச்சி க்கு
ஈடு இணை இல்லை
என்று சொல்கிறாயோ...
கண்ணா! மணிவண்ணா...
 

Kavyajaya

Well-Known Member
அன்னையின் கால்களை அரியணை ஆக்கி
அவளின் பட்டாபிஷேகத்தில் தினம் தினம் நனையும் மகிழ்ச்சியில் நீ.:D:D:D

அவளோ உன் முத்துப்பல் சிரிப்பில் உலகையே மறந்து நீயே அவள் உலகமென ரசித்துக்கொண்டிருப்பாள்.:love::love::love:

நானோ உன் மேனி பட்ட நீர், பாலாக தீர்த்தமாக அமிர்தமாக மாறிய விந்தையை யோசித்துக்கொண்டிருக்கிறேன். :unsure::unsure::unsure:

அதையும் நீ அறிந்து தான் எங்களை எண்ணி சிரிக்கிறாயோ கண்ணா மயில்தோகை மன்னா.. ;););)
 

Joher

Well-Known Member
நானும்......... but for the situation.......

அன்று உனக்கு அம்மாவின் காலடியில் ஆனந்த குளியலடா என் கண்ணா......
இன்று உதித்தால் அடுப்பங்கரை sink-லே ஆயா குளியலடா என் கண்ணா.....

:D:D:D
 

Hema27

Well-Known Member
அம்மா...
உன் பாதங்களை அரியணையாக்கி
எவ்வளவு நீ தேய்த்தாலும்
உன் போல் வெண்ணிறம் வராத
கார்வண்ணன், கருத்த அழகனே நான்
போதும்! விட்டுவிடு என்னை...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top