படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா
பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா
படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா
பழைய பாடம் தேவை இல்லை வாத்தியாரய்யா
பார்வை சொல்லும் பாடம் கண்டே விழிக்கிறேன் அம்மா
நான் படிப்பதெங்கே புதிய பாடம் வாத்தியாரம்மா
பார்வை சொல்லும் பாடம் கண்டே விழிக்கிறேன் அம்மா
நான் படிப்பதெங்கே புதிய பாடம் வாத்தியாரம்மா
கிட்டே சென்று தொட்டால் குளிரும் புது நெருப்பு நாம்
எட்டிச் சென்றால் சுடும் நெருப்பு என்ன நெருப்பு
(கிட்டே)
ஒட்டும் இரு உள்ளம்தன்னில் பற்றிக் கொண்டது
ஒட்டும் இரு உள்ளம்தன்னில் பற்றிக் கொண்டது அந்த
புத்தம் புது நெருப்பைத்தானே காதல் என்பது கவிஞர் சொன்னது:
(படிக்க)
தன்னைத்தானே சுற்றிக் கொண்டு இந்த உலகமே
செங்கதிரோனை சுற்றும் சேதி பழைய பாடமே
(தன்னைத்தானே)
என்னை மட்டும் சுற்றிக் கொண்டு இருந்த உள்ளமே
என்னை மட்டும் சுற்றிக் கொண்டு இருந்த உள்ளமே இன்று
உன்னை சுற்றிக் கேட்கும் பாடம் புதிய பாடலே புதிய பாடலே
படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரம்மா
பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா