நேசம் மறவா நெஞ்சம்-22Nesam Marava Nenjam

Advertisement

muthu pandi

Well-Known Member
கோவிலுக்கு சென்றவர்கள் வண்டியின் சாவியை வைத்து சாமி கும்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கயல் சாவித்திரியிடம் வண்டியை காட்டிக் கொண்டிருக்க கண்ணன் வண்டியை ஸ்டார்ட் பண்ணும் முறையை கற்று கொடுத்துக் கொண்டிருக்கும் போது போன்வர... அதை எடுத்து பேசிக் கொண்டிருக்க...கயல் விளையாட்டுபோல வண்டியை ஸ்டார்ட் பண்ணியிருந்தாள்..... சாவியை போட்டு பிரேக்கை பிடிக்காமல் ஆக்சிலேட்டரை வேகமாக திருகவும் வண்டி விக்கென்று கிளம்பி நேராக சென்று நான்குவீடு தள்ளி வீடு கட்டுவதற்காக குவித்திருந்த மணலில் மோதி கீழே விழுந்திருந்தது..... வண்டி வேகமாக கிளம்பவும் வண்டியில் இருந்து கையை எடுத்த கயலுக்கு கைகாலெல்லாம் வெடவெடத்தது.....



வண்டியின் சத்தத்தில் திரும்பிய கண்ணன் கயலின் இந்த செயலால் கோபத்தின் உச்சிக்கு சென்றவன்....... கயலை பளார் என்று..... ஓங்கி ஒரு அறை வைக்க..... கயல் சுருண்டு போய் கீழே விழ காந்திமதி வந்து தாங்கியிருந்தார்.....



“கண்ணன் உனக்கெல்லாம் அறிவே....சுத்தமா... இல்லயா.....இன்னேரம் ரோட்டுல யாராச்சும் இருந்திருந்தா .... என்னாயிருக்கும்......ச்சே..”.என்றபடி வண்டியை எடுக்கச் சென்றான்........



மணலில் மோதியிருந்ததால் வண்டிக்கு சேதாரம் எதுவும் இல்லை..... கயலு தான் செய்த முட்டாள் தனத்தை எண்ணி........ பயந்து போயிருந்தாள்......



கடவுளே...... இப்பதான அந்த பக்கத்து வீட்டு குழந்தை விளையாடிட்டு உள்ள போச்சு...... அது மட்டும் வெளிய நின்னுட்டு இருந்துச்சுன்னா...... என்னால...தாங்கவே முடியலயே...நல்லவேளை...நீதான்பா....காப்பாத்துன.....என்று அவள் மனம் யோசித்துக் கொண்டிருக்க......கண்ணன் அடித்ததால் அந்த வலியில் அவளறியாமல் கண்ணீர் வடிந்து கொண்டே....இருந்தது......



சாவித்திரிக்கு யார் பக்கம் பேசுவதென்றே புரியவில்லை...... கயல் செய்தது மிக பெரிய தவறுதான்...... அதுக்கு இப்புடி போட்டு அடிச்சிட்டானே........



காந்திமதிக்கு தன் பேத்தியை பார்க்க பார்க்க வயிற்குள் ஏதோ பண்ணியது.....நாம இந்த சின்ன குருத்த தேவையில்லாம கல்யாணம் பண்ணிட்டமோ...... என்றுதான் தோன்றியது..... கயலை தூக்க அவள் கன்னத்தில் கண்ணனின் அஞ்சு விரல் பதிவும் இருந்தது..... அவளை தாங்கிப் பிடித்து உள்ளே கூட்டி வர......கயலுக்கு தான் கண்ணீர் நின்ற பாடில்லை...... அவள் ஒன்றும் பேசாமல் மாடி ஏறி வந்தவள்..... சேலையை கூட மாற்றாமல் கட்டிலில் படுத்திருந்தாள்....... இரவு சாப்பிட கீழே இறங்கவுமில்லை......அப்படியே தூங்கி போயிருந்தாள்....



மாடிக்கு வந்த கண்ணனுக்கு மனசே ஆறவில்லை...... இவ இன்னைக்கு மட்டும் யார் மேலயாவது மோதியிருந்தா என்ன ஆகியிருக்கும்..... இன்னும் இப்புடி சின்னபுள்ள மாதிரியே இருக்காளே..... எப்பதான் விளையாட்டு தனத்த விடுவா......எதுலதான் விளையாடுறதுன்னு ஒரு அளவில்ல..... நல்ல வேள இவ வண்டியில ஏறி ஸ்டார்ட் பண்ணல..... ஏறியிருந்தா என்ன இவநிலைமை என்ன ஆகியிருக்கும் முருகா நீதாம்பா.... இவளை காப்பாத்துன..... என்று யோசித்தபடி படுத்திருந்தவன் லேசாக கயலை திரும்பி பார்க்க..... அதிர்ந்து போயிருந்தான்..... அவன் ஓங்கி அறைந்ததில்.... அவளின் கன்னத்தில் அஞ்சு விரலும் பதிந்த இடம் அப்புடியே....கருஞ்சிவப்பாக மாறி இருந்தது.....நாமளும் இப்புடி அடிச்சிருக்க கூடாது......அவள் கன்னத்தை தடவியவனுக்கு தன் கண்களில் கண்ணீர் வந்தது....



கயலுக்கு இரவெல்லாம் ஆழ்ந்த உறக்கமே இல்லை...... வண்டி யார் மீதோ மோதிய மாதிரியே கனவு வந்தது..... தூக்கத்தில் கண்ணனை நெருங்கிய கயல் அவன் மார்பு கூட்டிற்குள் ஒடுங்கியிருந்தாள்..... இரவெல்லாம் பயத்தில் அவளுக்கு காய்ச்சலே வந்திருந்தது...... தன் மீது படிந்திருந்த உடற்சூட்டினை உணர்ந்தவன்...... கயலின் நெற்றியில் கை வைத்து பார்க்க..... உடம்பு நெருப்பாய் கொதித்தது ...... கீழே இறங்கிப் போய் வென்னீர் கொண்டு வந்தவன் கயலை எழுப்ப அவளுக்கு கண்ணைகூட திறக்க முடியாமல் வெகுவாய் காந்தியது...... அவளுக்கு காய்ச்சலுக்கு உரிய மாத்திரையை கொடுத்தவன்.... அவளின் நெற்றியில் ஈர துணியை போட்டு மெதுவாக துடைத்து விட்டான்..... மறுநாள் காலை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்று வந்தவன்..... மருந்து மாத்திரை கொடுத்து கவனித்துக் கொண்டான்......



இருநாட்களில் காய்ச்சல் விடவும் காந்திமதி கயலிடம் வந்து.....” ஆத்தா வாறியாடா நாம நம்ம ஊருக்கு போவோம்....”



“ஏன் அப்பத்தா.... அதான் தீபாவளிக்கு இன்னும் பதினைஞ்சு நாளுதானே இருக்கு..... ஒருவாக்குல அப்ப வாரோம்ப்த்தா.......”



“இல்லத்தா..... எம்மனசு ஆறல.... கண்ணைமூடி கண்ணை திறந்தா... ஒம்புருசன் அடிச்சதே கண்ணுக்கு முன்னாடி வருதுத்தா.....உன்னைய வுட்டுட்டு போனா எம்மனசு ஆறாது......நீ வா.... அவுக தீபாவளிக்கு வருவாகள்ள அப்ப கூட வரலாம்......”



அப்பத்தாவும் பேத்தியும் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட சாவித்திரிக்கு திக்கென்றது..... நம்ம மகன மருமக தப்பா நினைச்சிருவாளோ.....கூடவே போயிருவாளோ.....என்று பயந்து போயிருக்க.....



கயலோ..”.அப்பத்தா...நீ சின்னபுள்ளயில எத்தனதரம் அடிச்சிருக்க..... நான் உங்கிட்ட எம்புட்டு அடி வாங்கியிருக்கேன்.....”



“ஆமா.... நீ அம்புட்டு சேட்டை பண்ணுவ....அதேன் அடிச்சேன்.....”



“அதே மாதிரிதான் அப்பத்தா இப்ப நடந்துச்சு.... அன்னைக்கு மட்டும் யாராச்சும் குறுக்க வந்திருந்தா.... வண்டி போய் மோதுன வேகத்துக்கு அவுக கைகால் ஒடஞ்சு போயிருக்கும் நான் பண்ணுனது ரொம்ப கிறுக்கு தனம் அப்பத்தா.....அதுனால அவுக அடிச்சது ஒன்னும் தப்பில்ல......நீ அத மறந்திரு.....”



“இருந்தாலும்........”



“அப்பத்தா...இன்னும் ரெண்டு நாளுள எனக்கு பரிட்சை ஆரம்பிக்க போகுது..... அவுக என்னைய நல்லா பாத்துக்குவாக....நீ கவலைபடாத.......”

காந்திமதியும் கவனித்து கொண்டுதான் இருந்தார்...... இரண்டுநாட்களாக கயலை கண்ணன் கவனித்து கொள்வதை......” சரித்தா....அப்ப நீ ஒருவாக்குல தீபாவளிக்கே ஊருக்கு வா.... நான் இன்னைக்கு கிளம்புறேன்.....” என்று அனைவரிடமும் சொல்லிக் கொண்டவள்...

கண்ணனிடம் தனியாக சென்று........”எங்க கயலு கொஞ்சம் சின்னபுள்ள தனமா....தான் நடந்துக்குது..... ஆனா அது தப்பு பண்ணுனா கொஞ்சம் எடுத்து சொல்லுங்கப்பா....புரிஞ்சு நடந்துக்கும்.....அத அடிக்க வேணாம்..... உங்க அடியெல்லாம் அதால தாங்க முடியாதுப்பா......” என்றபடி கண்ணீர்வடிய அவர் கைஎடுத்து கும்பிட........



கண்ணன் பதறி போய் அவர் கையை பிடித்திருந்தான்....”.என்னைய மன்னிச்சுருங்க அப்பத்தா.... அன்னைக்கு நான் ஏதோ கோபத்துல அப்புடி நடந்துட்டேன்.......”



“இல்லப்பா.....அது சும்மா படிச்சுகிட்டு இருந்தபுள்ளயை எவளுக்காண்டியோ....நான் இவ வாழ்க்கைய பணயம் வச்சிட்டேன்..... அவ எங்க குலசாமி மாதிரிப்பா.... அன்னைக்கு நான் சொன்ன ஒரு வார்த்தைக்கு கட்டுபட்டு உங்க கூட வந்தா.... அவள பத்திரமா பாத்துக்குங்க.....நான் வாரேன்பா.....”என்றபடி ஊருக்கு கிளம்பியிருந்தார்......



அன்றிரவு தன் அறைக்கு வந்த கண்ணன் கயல் படித்துக் கொண்டிருக்கவும் கீழே சென்று சாப்பிட்டு வந்தவன்....படுக்க தயாரானான்.... அன்று நடந்த பிரச்சனைக்கு பிறகு இருவரும் பேசிக் கொள்ளவேயில்லை..... கண்ணன் மாத்திரை கொடுக்கும் போது ஒன்றும் பேசாமல் வாங்கி போட்டுக்கொள்வாள்.....



இன்று கண்ணன் படுக்க தயாராகவும்....”கயல் உங்ககிட்ட ஒன்னு சொல்லனுமே.....”



என்ன என்று கண்ணால் அவளை பார்த்தபடி பேசாமல் இருக்க.......



“என்னைய மன்னிச்சிருங்க.... நான் அன்னைக்கு பண்ணுனது ரொம்ப தப்பு.... இப்புடி வண்டி வேகமா போகுமுன்னு எனக்கு தெரியாது......” என்று அவனை பார்த்தபடி இருக்க....



வேகமாக எழுந்த கண்ணன்..... எட்டி அவளை அணைத்திருந்தான்......அவள் முகத்தை தன் மார்பில் புதைத்தவன்...”..நீதாண்டி என்னைய மன்னிக்கனும்...”. என்றபடி அன்று அறைந்த கன்னத்தை தடவிக் கொடுக்க.....

“ எனக்கு கோபம் வந்தா என்ன பண்ணுறேன்னே தெரியமாட்டேங்குது........”.



“அப்பா..... எங்கிட்ட பேசிட்டீங்களா..... எங்க எம்மேல இன்னும் ரொம்ப கோபத்துல இருக்கீங்களோன்னு நினைச்சேன்..... ஸ்ஸ்ஸ்...அப்பா..... இனிமேதான் நான் படிச்சதே எம்மண்டைல ஏறும்..... நானும் மூனுநாளா படிச்சு படிச்சு பாக்குறேன்..... எனக்கு அதுல எழுத்தே தெரியல.....”



“ஏண்டி கண்ணு வலிக்குதா....”.



“இல்ல உங்க கோபமான மூஞ்சியே என் முன்னாடி வந்துட்டே இருந்துச்சு..... இப்ப நீங்க பேசவும் தான் எனக்கு நிம்மதியா இருக்கு.....”



“போடி லூசு.....நான் பேச வேண்டிய டைலாக்கெல்லாம் நீ பேசுற..... நீ பேசாம இருக்கவும்தாண்டி.... எனக்கு கடையில ஒரு வேலையும் ஓடல.... உன்னோட முகமே என்கண்ணு முன்னாடி வந்துட்டே இருந்துச்சு.....” என்றபடி அவள் கன்னத்தை தடவியவன்...”.சாரிடி..... “என்று அவள் கன்னத்தில் முத்தமிட......

“ போங்க போங்க நான் போய் படிக்கனும்.....”



“படி....ஆனா இன்னும் ரெண்டுமுத்தத்த வாங்கிட்டு படி……” என்றபடி மீண்டும் மீண்டும் அந்த கன்னத்திலேயே முத்தமிட........



“போதும் போங்க..... கூசுது........”என்றபடி அவள் விலக எத்தனிக்க.... கண்ணன் அவளை இறுக்கி அணைத்து இரு கன்னத்திலும் அழுந்த முத்தமிட்டு ம்ம்ம் இப்ப போய் படி........ இப்பதாண்டி எனக்கு தூக்கம் வரும்......” அப்பா ரெண்டு மூனு நாளா எனக்கு தூக்கமே இல்லடி......” என்றபடி படுத்தவன்...உடனே உறங்கியிருந்தான்......



மறுநாளில் இருந்து கயலுக்கு பரிட்சையும் ஆரம்பித்ததால் கயல் அதிலேயே மூழ்கிப்போக...கண்ணனும் அவளை தொந்தரவு செய்யாமல் இருந்தான்...... பரிட்சை முடிந்தவுடன் சாவித்திரியுடன் சேர்ந்து தீபாவளி பலகாரங்களு சுட உதவியாக இருந்தாள்...... விடிந்தால் தீபாவளி...............



இனி......................?



தொடரும்......
nice
 

Keerthi elango

Well-Known Member
Parra...paiyan vitha vithama vangi kuvikiratha....scooty veraya...sema...adapavi vandi than yar melayum idikilaye aparam eanda avala adichu kaachal vara vecha....too bad thambi....ithunga rendum senthu namala fool Akidum polaye...enama romance pandranga pa...super super...thala diwali kaga i m waiting chlm...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top