நேசம் மறவா நெஞ்சம்
அத்தியாயம்-10
சாவித்திரி தன் சம்மதத்தை தெரிவித்ததும் காந்திமதிக்கு மிகவும் சந்தோசமாகபோயிற்று. தங்கள் குலசாமி கொடுத்த உத்தரவுபலிக்க போவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.மேலும் கண்ணன் குடும்பத்தை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.
சாவித்திரி காந்திமதியிடம்” ஆத்தா கண்ணனுக்கு பொண்ணு பிடிச்சுருச்சு.நீங்க உங்க பேத்திக்கிட்ட கேட்டு உங்க சம்மதத்த சொல்லுங்க......”
“என்னத்தா இப்படிச் சொல்லுற என்னோட பேத்திக எல்லாருமே நாங்க கிழிக்குற கோட்ட தாண்டமாட்டாளுக. எங்களுக்கு பிடிச்சிருந்தா போதும்.பெத்தவுக என்னைக்கும் பிள்ளைகளுக்கு நல்லதுதான் நடத்திவைப்பாங்கன்னு அவுகளுக்கு தெரியும்தா..........அதுனால எங்களுக்கு முழுச்சம்மதம்.”
“ அப்ப ரொம்ப சந்தோசம்..........”
அழகர் சாவித்தரியிடம்” தங்கச்சி கல்யாணத்த எப்ப வச்சுகலாம்ன்னு நினைக்கிறீங்க இப்ப வைகாசி முடியபோகுது. ஆனி ஆடி போக ஆவணில முடிவு செஞ்சுகலாமாத்தா.....”
“இல்லண்ணே தம்பிக்கு ஆனி 25ந்தேதி யோட 27 வயசு முடியுது அதுநாள அதுக்குள்ள தேதிய வச்சுக்கிலாம்னே..”
“என்னத்தா இடையில ஒரு மாசந்தான இருக்கு ..........”
“ஒரு மாசம் பத்தாதாண்ணே........எங்களுக்கு நகை நட்டெல்லாம் ஒன்னும்
தேவையில்லணே கட்டுனபுடவயோட அனுப்புனா கூட போதும்ண்ணே....”
காந்திமதி” சாவித்திரி என்ன அப்படி சொல்லிப்புட்ட........ நாங்க எங்க பேத்திய சும்மாவ அனுப்புவோம்.....சீரும் சிறப்புமா எல்லாச்சீரும் செஞ்சுதாத்தா அனுப்புவோம்....”
“உங்க பிள்ளைக்கு நீங்க போடுறீங்க அது உங்க பிரியம்தா........ அப்புறம் ஒரு சின்ன விசயம்ண்ணே எங்கவீட்டு பிள்ளைகளுக்கு எல்லாமே கோயில்ல வச்சு தானே கல்யாணம் நடத்துறது பழக்கம் நம்ம கண்ணனுக்கு குன்றக்குடி முருகன் கோவில்ல நடத்தலாம்னு பாக்குறேண்ணே...”
“அதுக்கென்னத்தா நடத்திரலாம்....”
“அப்பனா இன்னக்கே ஒப்புதாம்புலம் மாத்திகலாம்ணே .......”
“கலியாணத்தன்னக்கு காலையில வெள்ளன பேசிமுடிச்சு உடனே கல்யாணத்த வச்சுகலாம்தா அப்பதான் எதாவது ஒரு நல்லது கெட்டதுனா போக வர சரியாயிருக்கும்.” அங்கிருந்த காலண்டரில் முகூர்த்த நாள் பார்க்க
“ஆனி 23ம்தேதி நல்லாயிருக்குனே...அன்னைக்கே கல்யாணத்த வச்சுகலாம்.”
அங்க வந்திருந்த பெரியவர்களை வைத்து முகூர்த்த ஓலை எழுதப்பட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
பின் அனைவரையும் கோவிந்தனும் தாமரையும் சாப்பிட அழைத்துச்சென்றன.ராமனும் சாப்பிட்டு முடித்து கை கழுவசென்ற போது தண்ணீர் இல்லாததால் மல்லிகா தண்ணீர் குடத்தை தூக்கிக்கொண்டு வந்தாள்.
ராமர் மல்லிகாவிடம்” ஏய் இங்க வா..........”
இவரு மாப்ளேயோட தம்பிதானே அப்ப நம்மல பாத்து கண்ணு அடிச்சாரா இல்லையாண்ணே தெரியலயே இப்பஎதுக்கு கூப்புடுறாரு......
” நான் யாருன்னு தெரியுதுல்ல”
“ஆமா நீங்க சுதாக்கா மாப்ளயோட தம்பிதானே”
“ஆமா.. ஆமா..... நீ நான் சொல்லறபடி ஒழுங்கா நடக்கணும் என்ன புரியுதா...... உங்க அக்கா எங்க வீட்டுக்குத்தான் வாழ வரப்போறாங்க தெரியுமில்ல..........?அதுனால நான் என்ன சொன்னாலும் கேக்கணும் புரியுதா.............?”
“ஓ......அப்படியா”
“என்னங்க இப்படி நடந்தா போதுமா......”.என்றபடி நடந்துகாட்டியவள்.
” உங்க வீட்டுக்கு எங்க அக்கா வாழ வந்தா நீங்க ரொம்ப பேசுவீங்களோ. எங்க அக்காகிட்ட உங்க ஜம்பம் எல்லாம் பலிக்காது நான் வேணா நீங்க பாவம்னு சொல்லி போனா போதுன்னு நல்லா பாத்துக்கச் சொல்லுறேன் புரியுதா........."
.”அடிங்க எங்கிட்டயேவா இந்தா வாரேன்.....”.என்று அடிப்பது போல வர உதட்டை சுழித்துவிட்டு ஓடிவிட்டாள்................
பரவால்லயே இவ நம்மளவிட கேடியா....இருப்பா போலயே........
கயலின் தம்பி அருணும் கண்ணனின் தம்பி முத்துவும் நல்ல நண்பர்கள் போல பழக ஆரம்பித்தார்கள்.முத்துவும் கயலை ஏற்கனவே கோயிலில் பார்த்து இருந்ததால் அவர்களுடன் சந்தோசத்துடன் பேசிக்கொண்டிருந்தான்..
அன்று இரவு வாசு தன் வீட்டில் ரகளை செய்துகொண்டிருந்தான்.....
“ஏம்மா உனக்கு இந்த சுதால்லாம் பொண்னாத் தெரியலயா........இரண்டு வருசமா பொண்ணுதேடுறேன்னு பொண்ணுதேடுறேன்னு சொல்லுற ஒரு பொண்ணயும் கண்ணுல கூட காட்டல.....”
“டேய் இந்த சுதா 5 பொம்பள பிள்ளகளோட பிறந்தவடா சீரு, நகையெல்லாம் எவ்வளவு போட்டுற போறாங்க நான் உனக்கு ஒத்தபிள்ள உள்ள வீட்ல பொண்ணு தேடுறேன் ஆனா பாரு ஒன்னு பொண்ணு நல்லாயிருந்தா வசதியில்ல ,இல்ல வசதியிருக்கு பொண்ணு நல்லாயில்ல,இரண்டும் இருந்தா ஜாதகம் பொருத்தமில்ல என்னய என்னப்பண்ணச் சொல்லுற,”
“அதெல்லாம் எனக்கு தெரியாதும்மா எனக்கு சுதாவ புடிச்சிருக்கு......எப்படியாச்சும் பேசி எனக்கு கல்யாணம் பண்ணிவைங்க..............”.
“டேய் லூசுப்பயலே உனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு.அந்த சுதாவுக்கு இன்னைக்குத்தானே பேசிமுடிச்சாங்க............”
“பேசிமுடிச்சா............அவன் என்ன தாலியா கட்டிட்டான்...........”
“டேய் நீ நிசமாவே சொல்லுறியாடா.............உங்க அப்பாவுக்கு தெரிஞ்சிச்சு..........உன்னைய விட்டுருவாருடா............என்னைய கொண்டுபோட்டுருவாருடா..............”
“அதெல்லாம் எனக்கு தெரியாதும்மா...............எனக்கு கொஞ்சம் காசு மட்டும் தம்பிகிட்ட வாங்கிகுடு........நான் என்னமாச்சும் பிளான் பண்ணுறேன்................”
“அவன் எனக்கே செலவுக்குக்கூட காசு குடுக்கல............நான் சொல்லுறத கேளு உனக்கு நல்லா பணக்காரப்பொண்ணா இவளவிட சூப்பரான பொண்ணா பாக்குறேன்............”
“ஒன்னும் தேவையில்ல..............”.என்றபடி கோபமாக வீட்டைவிட்டு வெளியேறினான்.
அத்தியாயம்-10
சாவித்திரி தன் சம்மதத்தை தெரிவித்ததும் காந்திமதிக்கு மிகவும் சந்தோசமாகபோயிற்று. தங்கள் குலசாமி கொடுத்த உத்தரவுபலிக்க போவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.மேலும் கண்ணன் குடும்பத்தை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.
சாவித்திரி காந்திமதியிடம்” ஆத்தா கண்ணனுக்கு பொண்ணு பிடிச்சுருச்சு.நீங்க உங்க பேத்திக்கிட்ட கேட்டு உங்க சம்மதத்த சொல்லுங்க......”
“என்னத்தா இப்படிச் சொல்லுற என்னோட பேத்திக எல்லாருமே நாங்க கிழிக்குற கோட்ட தாண்டமாட்டாளுக. எங்களுக்கு பிடிச்சிருந்தா போதும்.பெத்தவுக என்னைக்கும் பிள்ளைகளுக்கு நல்லதுதான் நடத்திவைப்பாங்கன்னு அவுகளுக்கு தெரியும்தா..........அதுனால எங்களுக்கு முழுச்சம்மதம்.”
“ அப்ப ரொம்ப சந்தோசம்..........”
அழகர் சாவித்தரியிடம்” தங்கச்சி கல்யாணத்த எப்ப வச்சுகலாம்ன்னு நினைக்கிறீங்க இப்ப வைகாசி முடியபோகுது. ஆனி ஆடி போக ஆவணில முடிவு செஞ்சுகலாமாத்தா.....”
“இல்லண்ணே தம்பிக்கு ஆனி 25ந்தேதி யோட 27 வயசு முடியுது அதுநாள அதுக்குள்ள தேதிய வச்சுக்கிலாம்னே..”
“என்னத்தா இடையில ஒரு மாசந்தான இருக்கு ..........”
“ஒரு மாசம் பத்தாதாண்ணே........எங்களுக்கு நகை நட்டெல்லாம் ஒன்னும்
தேவையில்லணே கட்டுனபுடவயோட அனுப்புனா கூட போதும்ண்ணே....”
காந்திமதி” சாவித்திரி என்ன அப்படி சொல்லிப்புட்ட........ நாங்க எங்க பேத்திய சும்மாவ அனுப்புவோம்.....சீரும் சிறப்புமா எல்லாச்சீரும் செஞ்சுதாத்தா அனுப்புவோம்....”
“உங்க பிள்ளைக்கு நீங்க போடுறீங்க அது உங்க பிரியம்தா........ அப்புறம் ஒரு சின்ன விசயம்ண்ணே எங்கவீட்டு பிள்ளைகளுக்கு எல்லாமே கோயில்ல வச்சு தானே கல்யாணம் நடத்துறது பழக்கம் நம்ம கண்ணனுக்கு குன்றக்குடி முருகன் கோவில்ல நடத்தலாம்னு பாக்குறேண்ணே...”
“அதுக்கென்னத்தா நடத்திரலாம்....”
“அப்பனா இன்னக்கே ஒப்புதாம்புலம் மாத்திகலாம்ணே .......”
“கலியாணத்தன்னக்கு காலையில வெள்ளன பேசிமுடிச்சு உடனே கல்யாணத்த வச்சுகலாம்தா அப்பதான் எதாவது ஒரு நல்லது கெட்டதுனா போக வர சரியாயிருக்கும்.” அங்கிருந்த காலண்டரில் முகூர்த்த நாள் பார்க்க
“ஆனி 23ம்தேதி நல்லாயிருக்குனே...அன்னைக்கே கல்யாணத்த வச்சுகலாம்.”
அங்க வந்திருந்த பெரியவர்களை வைத்து முகூர்த்த ஓலை எழுதப்பட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
பின் அனைவரையும் கோவிந்தனும் தாமரையும் சாப்பிட அழைத்துச்சென்றன.ராமனும் சாப்பிட்டு முடித்து கை கழுவசென்ற போது தண்ணீர் இல்லாததால் மல்லிகா தண்ணீர் குடத்தை தூக்கிக்கொண்டு வந்தாள்.
ராமர் மல்லிகாவிடம்” ஏய் இங்க வா..........”
இவரு மாப்ளேயோட தம்பிதானே அப்ப நம்மல பாத்து கண்ணு அடிச்சாரா இல்லையாண்ணே தெரியலயே இப்பஎதுக்கு கூப்புடுறாரு......
” நான் யாருன்னு தெரியுதுல்ல”
“ஆமா நீங்க சுதாக்கா மாப்ளயோட தம்பிதானே”
“ஆமா.. ஆமா..... நீ நான் சொல்லறபடி ஒழுங்கா நடக்கணும் என்ன புரியுதா...... உங்க அக்கா எங்க வீட்டுக்குத்தான் வாழ வரப்போறாங்க தெரியுமில்ல..........?அதுனால நான் என்ன சொன்னாலும் கேக்கணும் புரியுதா.............?”
“ஓ......அப்படியா”
“என்னங்க இப்படி நடந்தா போதுமா......”.என்றபடி நடந்துகாட்டியவள்.
” உங்க வீட்டுக்கு எங்க அக்கா வாழ வந்தா நீங்க ரொம்ப பேசுவீங்களோ. எங்க அக்காகிட்ட உங்க ஜம்பம் எல்லாம் பலிக்காது நான் வேணா நீங்க பாவம்னு சொல்லி போனா போதுன்னு நல்லா பாத்துக்கச் சொல்லுறேன் புரியுதா........."
.”அடிங்க எங்கிட்டயேவா இந்தா வாரேன்.....”.என்று அடிப்பது போல வர உதட்டை சுழித்துவிட்டு ஓடிவிட்டாள்................
பரவால்லயே இவ நம்மளவிட கேடியா....இருப்பா போலயே........
கயலின் தம்பி அருணும் கண்ணனின் தம்பி முத்துவும் நல்ல நண்பர்கள் போல பழக ஆரம்பித்தார்கள்.முத்துவும் கயலை ஏற்கனவே கோயிலில் பார்த்து இருந்ததால் அவர்களுடன் சந்தோசத்துடன் பேசிக்கொண்டிருந்தான்..
அன்று இரவு வாசு தன் வீட்டில் ரகளை செய்துகொண்டிருந்தான்.....
“ஏம்மா உனக்கு இந்த சுதால்லாம் பொண்னாத் தெரியலயா........இரண்டு வருசமா பொண்ணுதேடுறேன்னு பொண்ணுதேடுறேன்னு சொல்லுற ஒரு பொண்ணயும் கண்ணுல கூட காட்டல.....”
“டேய் இந்த சுதா 5 பொம்பள பிள்ளகளோட பிறந்தவடா சீரு, நகையெல்லாம் எவ்வளவு போட்டுற போறாங்க நான் உனக்கு ஒத்தபிள்ள உள்ள வீட்ல பொண்ணு தேடுறேன் ஆனா பாரு ஒன்னு பொண்ணு நல்லாயிருந்தா வசதியில்ல ,இல்ல வசதியிருக்கு பொண்ணு நல்லாயில்ல,இரண்டும் இருந்தா ஜாதகம் பொருத்தமில்ல என்னய என்னப்பண்ணச் சொல்லுற,”
“அதெல்லாம் எனக்கு தெரியாதும்மா எனக்கு சுதாவ புடிச்சிருக்கு......எப்படியாச்சும் பேசி எனக்கு கல்யாணம் பண்ணிவைங்க..............”.
“டேய் லூசுப்பயலே உனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு.அந்த சுதாவுக்கு இன்னைக்குத்தானே பேசிமுடிச்சாங்க............”
“பேசிமுடிச்சா............அவன் என்ன தாலியா கட்டிட்டான்...........”
“டேய் நீ நிசமாவே சொல்லுறியாடா.............உங்க அப்பாவுக்கு தெரிஞ்சிச்சு..........உன்னைய விட்டுருவாருடா............என்னைய கொண்டுபோட்டுருவாருடா..............”
“அதெல்லாம் எனக்கு தெரியாதும்மா...............எனக்கு கொஞ்சம் காசு மட்டும் தம்பிகிட்ட வாங்கிகுடு........நான் என்னமாச்சும் பிளான் பண்ணுறேன்................”
“அவன் எனக்கே செலவுக்குக்கூட காசு குடுக்கல............நான் சொல்லுறத கேளு உனக்கு நல்லா பணக்காரப்பொண்ணா இவளவிட சூப்பரான பொண்ணா பாக்குறேன்............”
“ஒன்னும் தேவையில்ல..............”.என்றபடி கோபமாக வீட்டைவிட்டு வெளியேறினான்.
Last edited: